13 7
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற குழுக்கள் நியமிப்பு : சபைத் தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

Share

நாடாளுமன்ற குழுக்கள் நியமிப்பு : சபைத் தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

நிதிக்குழு உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்களை நியமிப்பு இன்றையதினம் (06.12.2024) பிற்பகல் தீர்மானிக்கப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

இடைக்கால பாதீட்டுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டு திகதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகளும் இடம்பெறவுள்ளது.

கணக்கு வாக்கு பணத்தின் கீழ் 1,402 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதியும், குறை மதிப்பீட்டு ஒதுக்கத்தின் கீழ் 215 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதியையும் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...