24 4
இலங்கைசெய்திகள்

டோக் குரங்கு பயங்கரவாதம்: விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Share

டோக் குரங்கு பயங்கரவாதம்: விவசாயிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

விவசாயிகளுக்கு தங்கள் பயிர்ச்செய்கை நிலங்களில் வன விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த (K. D. Lalkantha) அறிவித்துள்ளார்.

காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவது, குறிப்பாக டோக் குரங்குகளால் சேதப்படுத்தப்படுவது ஒரு தீவிரமான பிரச்சினையாக உள்ளதால் அதனை சிலர் “டோக் குரங்கு பயங்கரவாதம்” என்றும் அழைப்பதாகவும் அவர் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

அத்தோடு, வன விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பிரச்சினையாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, விவசாயிகள் தங்கள் பயிரிடப்பட்ட நிலத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் அதற்கு எந்த சட்ட சிக்கல்களும் இல்லை அமைச்சர் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், நீண்ட காலம் செல்வதற்கு முன்னரே அது தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...