4 1
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

Share

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

ஆடம்பர வாகனங்களை ஓட்டுவதற்கும், கதவுகளைத் திறப்பதற்கும் வேலையாட்கள் இருக்க வேண்டும் என்ற பிரத்தியேக ஆசை எதுவும் இல்லை என குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்(saroja pauiraj) தெரிவித்துள்ளார்.

தனது வேலையை இன்னும் திறம்படச் செய்ய வாகனம் மட்டுமே தேவை என்கிறார்.

யாருக்கும் வாகன உரிமம் வழங்கப்படாது

புதிய அரசாங்கத்தின் கீழ், யாருக்கும் வாகன உரிமம் வழங்கப்படாது என்றும், உரிய கடமைகளுக்கு மட்டுமே வாகனம் வழங்கப்படும் என்றும், ஐந்து வருட முடிவில் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத் தின் மீது அதிருப்தி அடையச் செய்யும் அரசியல் தந்திரமாக அரிசி, தேங்காய் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், அவர்கள் மீது மக்கள் வீழ்ந்து விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், பொதுத் தேர்தலுக்குப் பிறகு தீவிரமாக வேலை செய்வதற்கான வாய்ப்பு மழை மற்றும் வெள்ளத்தால் தடைப்பட்டது வருத்தமளிக்கிறது, என்று அவர் தொடர்ந்து கூறினார்.

மேலும் அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்யும் அரசியல் தந்திரமாக தேங்காய் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன, அதற்காக மக்கள் அதில் விழந்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...