1 64
இலங்கைசெய்திகள்

சிவகார்த்திகேயன் அவ்வாறு செய்து முன்னணி இடத்தை பிடித்துள்ளார்.. ரகசியத்தை கூறிய ஆர் ஜே பாலாஜி

Share

சிவகார்த்திகேயன் அவ்வாறு செய்து முன்னணி இடத்தை பிடித்துள்ளார்.. ரகசியத்தை கூறிய ஆர் ஜே பாலாஜி

ரம்பத்தில் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி, தற்போது பிரபல நடிகர், இயக்குனராக வலம் வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் சொர்க்க வாசல்.

அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், சானியா அய்யப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

90களில் மெட்ராஸ் சிறைச்சாலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் என்பவர் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 29 – ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி சிவகார்த்திகேயன் குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.

அதில், “விஜய் டிவியில் திட்டம் போட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிவகார்த்திகேயன் போன்று வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது போன்று எல்லாம் யாராலும் வரமுடியாது.

அவர் கடின உழைப்பாலும் சினிமா மேல் உள்ள ஆசையாலும் திறமையை வைத்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். அவ்வாறு இருக்க விஜய் டிவிக்குள் சென்றாலே அவரை போன்று ஆகி விடலாம் என்று என்ணுவது தவறு” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...

சூறாவளி
இலங்கை

டைபூன் சூறாவளியின் தீவிரம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல்...

Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...