4 43
இலங்கைசெய்திகள்

வடக்கு காணி – அரசியல் கைதிகள் விடுதலை – தேசிய மக்கள் சக்தி எம்.பி கருத்து

Share

வடக்கு காணி – அரசியல் கைதிகள் விடுதலை – தேசிய மக்கள் சக்தி எம்.பி கருத்து

விடுக்கப்படாத காணிகளை மிக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் சுமைகளை குறைப்பதே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு மற்றும் மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கடந்த கால அரசாங்கங்கள் இவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்கவில்லை. இவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளமையானது நாட்டுக்கு மிகப்பெரிய சுமையாகும்.

காணிகளை விடுவிக்குமாறு இந்த மக்கள் நீண்டகாலமாக கோரிவருகின்றனர். எவ்வித வழக்குகளும் இல்லாது அரசியல் கைதிகளை நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளை மிக விரைவாக தீர்க்கும் தேவை அரசாங்கத்துக்கு உள்ளது.

எனவே, வடக்கு மக்களின் காணி பிரச்சினை என்பது நீண்டகாலமாக தீர்க்கப்பாடதுள்ள பிரச்சினை என்பதுடன், விரைவாக தீர்க்க வேண்டிய பிரச்சினையுமாகும். நாம் அதனை வேகமாக செய்வோம்.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...