2 30
ஏனையவை

அநுர அரசின் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பேன் : மொட்டுக்கட்சி உறுப்பினர் உறுதி

Share

அநுர அரசின் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பேன் : மொட்டுக்கட்சி உறுப்பினர் உறுதி

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சானக மாதுகொட (Chanaka Madugoda) தெரிவித்து்ளளார்.

காலியில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு பலமான ஆணையை வழங்கியுள்ளார்கள்.

மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். ஒத்துழைப்பு வழங்குவதற்கு அரசாங்கத்துடன் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது.

தேர்தலில் ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும். காலி மாவட்ட மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படுவேன்.

தேசிய மக்கள் சக்திக்கு (NPP) தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இந்த மாற்றம் தேசிய நல்லிணக்கத்துக்கான சிறந்த முன்னேற்றமாகும்“ என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...