1 35
ஏனையவை

புள்ளடி மாத்திரம் பயன்படுத்துங்கள் – பொதுமக்களிடம் கோரிக்கை

Share

புள்ளடி மாத்திரம் பயன்படுத்துங்கள் – பொதுமக்களிடம் கோரிக்கை

இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L.Rathnayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டன.

எனினும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போதும், விருப்பு வாக்குகளை வழங்கும்போதும் புள்ளடியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.

எனவே உரிய முறையை பின்பற்றி அளிக்கும் வாக்கினை செல்லுபடியாகும் வாக்காக வாக்காளர்கள் மாற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை (14) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்குத் தேவையான விடுமுறையை தனியார் மற்றும் வங்கித்துறையில் பணிபுரியும் அனைத்து மக்களுக்கும் வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து வாக்காளர்களும் தமது இறையாண்மை அதிகாரத்தை பிரயோகிக்க தமது வாக்கை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...