21 6172cadf35a84 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

Share

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பான காணொலியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த காணொலியை பதிவிட்டுள்ள அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தற்போது இந்த சம்பவம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் காதுகளுக்கு சென்றடையும் என பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, மோட்டார்சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞர்களை போக்குவரத்துப் பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது, மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...