16 9
இலங்கைசெய்திகள்

அறுகம் குடா பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு அமெரிக்காவிடம் கோரியுள்ள இலங்கை

Share

அறுகம் குடா பாதுகாப்பு எச்சரிக்கையை மீளப்பெறுமாறு அமெரிக்காவிடம் கோரியுள்ள இலங்கை

முன்னதாக மறு அறிவித்தல் வரை அறுகம் குடா (Arugam Bay) பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளுக்கு வழங்கிய பயண ஆலோசனையை மீளப் பெறுமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அறுகம் குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் தங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் கடந்த அக்டோபர் 23 ஆம் திகதியன்று எச்சரிக்கையை வெளியிட்டது.

இந்த அச்சுறுத்தல் காரணமாக, மறு அறிவித்தல் வரை அறுகம் குடா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், தற்போது குறித்த பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பயண ஆலோசனையை மீளப்பெறுமாறு கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...