16 8
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்காக 35 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசாங்கம்

Share

மகிந்தவுக்காக 35 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்களுக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே அதிகம் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 110 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மகிந்தவுக்காக 32 கோடி 65 லட்சத்து 82 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆர். பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவின் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 110 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வருடாந்த பாதுகாப்பு செலவுகள் பின்வருமாறு,

சந்திரிகா குமாரதுங்க 9 கோடி 88 லட்சத்து 71ஆயிரத்து 866 ரூபாய்,

மகிந்த ராஜபக்ச 32 கோடி 65 லட்சத்து 8271 ஆயிரத்து 819 ரூபாய்,

மைத்திரிபால சிறிசேன 18 கோடி 51 லட்சத்து 66 ஆயிரத்து 535 ரூபாய்,

கோட்டாபய ராஜபக்ஷ 3 கோடி 91 லட்சத்து 41 ஆயிரத்து 488 ரூபாய்,

ஹேமா பிரேமதாச 2 கோடி 98 லட்சத்து 78 ஆயிரத்து 008 ரூபாய்,

ரணில் விக்கிரமசிங்க 25 கோடி 33 லட்சத்து 95 ஆயிரத்து 249 ரூபாய்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாவலர்களுக்கான மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், உணவு மற்றும் குடிநீர், தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் என மொத்த செலவுகள் 110 கோடி ரூபாயை தாண்டுவதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...