17 8
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சரின் மனைவி மீது குற்றச்சாட்டு: துண்டிக்கப்பட்ட மின் – நீ்ர் விநியோகம்

Share

முன்னாள் அமைச்சரின் மனைவி மீது குற்றச்சாட்டு: துண்டிக்கப்பட்ட மின் – நீ்ர் விநியோகம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின்(sanath nishantha) மனைவி சட்டத்தரணி சாமரி பெரேரா வசித்து வந்த அரச குடியிருப்பின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச குடியிருப்பை ஒப்படைக்குமாறு அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பல முறை அறிவித்த போதிலும் அது தொடர்பில் கவனம் எடுக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வீட்டு வாடகையையும் அவர் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலைமையால் வழமையான முறையில் குறித்த இல்லத்தை கையகப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.

சாமரி பெரேரா வசித்து வந்த அரச குடியிருப்பை தவிர, முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய ஏனைய அனைத்து குடியிருப்புக்களும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...