12 6
இலங்கைசெய்திகள்

புல்மோட்டையில் இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு..!

Share

புல்மோட்டையில் இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு..!

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (06) மாலை பாடசாலையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (06) புதன்கிழமை காலை பாடசாலை வரவுப் பதிவு இயந்திரத்தில் வருகையைப் பதிவு செய்த பின்னர் இவர் வகுப்பறைகளுக்குச் சென்று காலை 10.30 மணி வரை பாடம் நடத்தியுள்ளார்.

இதன்போது அவர் தனது இடமாற்றம் தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்கத் திருகோணமலை நகருக்குச் செல்லவுள்ளதாக மாணவர்களுக்குக் கூறியுள்ளார்.

எனினும், நேற்றுப் பிற்பகல் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாலை 3.30 மணிவரை வெளியேறுவதற்கான பதிவை இயந்திரத்தில் இவர் பதிவு செய்யவில்லை.

இதேவேளை, குறித்த ஆசிரியரது மனைவி தமது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் எதுவும் இல்லாத நிலையில் பாடசாலை அதிபருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வினவியுள்ளார்.

இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மேற்படி ஆசிரியர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்வையிட்டபோது அவர் உயிரற்ற நிலையிலும் கால்களில் இரத்தக் காயங்களுடனும் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதவானின் உத்தரவுக்கு இணங்க சடலம் சட்ட வைத்திய மரண பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...