24 2
இலங்கைசெய்திகள்

ஐபிஎல் 2025 தொடர்: ஏலப்பட்டியலில் 29 இலங்கை வீரர்கள்

Share

ஐபிஎல் 2025 தொடர்: ஏலப்பட்டியலில் 29 இலங்கை வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் பதிவுகள் 2024 நவம்பர் 4ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக பிசிசிஐ(BCCI) அறிவித்துள்ளது.

இதன்படி 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் 1574 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வெளிநாட்டு வீரர்களாக, 29 இலங்கை வீரர்களும் காணப்படுகின்றனர்.

இதனை தவிர ஆப்கானிஸ்தானின் 29 பேரும்,அவுஸ்திரேலியாவின் 76 பேரும், பங்களாதேஸின் 13 பேரும், கனடாவின் 3 பேரும், இங்கிலாந்தின் 52 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன், அயர்லாந்தின் 9 பேரும் இத்தாலியின் 1 வீரரும், நெதர்லாந்தின் 1 வீரரும் , நியூஸிலாந்தின் 39 பேரும், ஸ்கொட்லாந்தின் 2 பேரும், தென்னாபிரிக்காவின் 91 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் 1 வீரரும், அமெரிக்காவின் 10 பேரும், மேற்கிந்திய தீவுகளின் 33 பேரும், சிம்பாப்வேயின் 8 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இந்தநிலையில், சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...