7 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர முயற்சித்த சட்டத்தரணிகள்: ரணில் வெளியிட்ட தகவல்

Share

அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர முயற்சித்த சட்டத்தரணிகள்: ரணில் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தொடர்வதற்கு சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் முயற்சித்த போதிலும் தாம் அதனை தடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மிகவும் சிறுபான்மையைக் கொண்ட பிரதமர் ஒருவரை நியமித்தமை மற்றும் தேர்தல் தினம் தொடர்பில் இவ்வாறு வழக்குத் தொடரப்படவிருந்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையான அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அவர்களை மறந்துவிட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...