12 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி உள்ளது

Share

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி உள்ளது

தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி செயல்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்திற்கு அமைவாக விலை மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதன்படி உலக சந்தையில் அதிகரித்துள்ள எரிவாயு விலையின் தொகைக்கு நிகரான அடிப்படையில் இலங்கையில் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விநியோகத்தை வரையறுத்துக் கொண்டுள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லிற்றோ எரிவாயு நிறுவனமும் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளை மீறி எரிவாயு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமைகளினால் சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் நவம்பர் மாதம் மூன்றாவது கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டு இருந்தபோதிலும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால், கடன் பெற்றுக் கொள்வதற்கு காலம் தாழ்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...