17
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வாகன முறைகேடு: விசாரணையில் சிக்கிய ஆலய பூசகர்!

Share

சட்டவிரோத வாகன முறைகேடு: விசாரணையில் சிக்கிய ஆலய பூசகர்!

கண்டி– கல்தன்ன பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றை நடத்தும் பூசகர் ஒருவரின் மகனுக்குச் சொந்தமான போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட சொகுசு ஜீப் வண்டியொன்றை தெல்தெனிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

திகன பிரதேசத்தில் சட்டவிரோத ஜீப் வண்டியொன்று இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த 30ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அங்கு, சந்தேகநபரிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனவும், இந்த வாகனத்தை பூசகரும் அவரது மகனும் பயன்படுத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது பூசகருக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் காணப்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக இந்த வாகனத்தை தனது மகனின் வீட்டிற்கு கொண்டு வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமானவை என சந்தேகிக்கப்படும் வேறு வாகனங்கள் இருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத்தகடு கண்டியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான வாகனத்திற்காக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட இலக்கம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் முன்னதாக சட்டவிரோத நடவடிக்கை ஒன்றின் காரணமாக பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மற்றுமொரு சட்டவிரோத வாகன விடுவிப்புடன் பூசகர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனமும் முன்னதாக விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக இதனுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவில் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சட்ட ஆலோசனையின்படி, பூசகரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...

12879419
செய்திகள்அரசியல்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் நாளாந்தக் கொடுப்பனவு ரூ. 1,550 ஆக உயர்வு: சுகாதார மேம்பாட்டிற்கு ரூ. 31,000 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை அதிகரிப்பது மற்றும் சுகாதாரத் துறையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து...

STK022 ELON MUSK CVIRGINIA F
செய்திகள்உலகம்

உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு: எலான் மஸ்க்கின் ரூ. 1 ட்ரில்லியன் ஊதியக் கோரிக்கைக்கு டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல்!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், தனக்கு 1 ட்ரில்லியன் டாலர்...

digital ID
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் பொருளாதாரம்: 2026-ல் ரூ. 25,500 மில்லியன் முதலீடு; மார்ச் 2026-ல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக...