17
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வாகன முறைகேடு: விசாரணையில் சிக்கிய ஆலய பூசகர்!

Share

சட்டவிரோத வாகன முறைகேடு: விசாரணையில் சிக்கிய ஆலய பூசகர்!

கண்டி– கல்தன்ன பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றை நடத்தும் பூசகர் ஒருவரின் மகனுக்குச் சொந்தமான போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட சொகுசு ஜீப் வண்டியொன்றை தெல்தெனிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

திகன பிரதேசத்தில் சட்டவிரோத ஜீப் வண்டியொன்று இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த 30ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அங்கு, சந்தேகநபரிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனவும், இந்த வாகனத்தை பூசகரும் அவரது மகனும் பயன்படுத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது பூசகருக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் காணப்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக இந்த வாகனத்தை தனது மகனின் வீட்டிற்கு கொண்டு வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமானவை என சந்தேகிக்கப்படும் வேறு வாகனங்கள் இருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத்தகடு கண்டியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான வாகனத்திற்காக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட இலக்கம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் முன்னதாக சட்டவிரோத நடவடிக்கை ஒன்றின் காரணமாக பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மற்றுமொரு சட்டவிரோத வாகன விடுவிப்புடன் பூசகர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனமும் முன்னதாக விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக இதனுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவில் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சட்ட ஆலோசனையின்படி, பூசகரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...