11
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

Share

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

நிதித்திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பணம் அச்சிடுதல் மற்றும் நிதி திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு போதியளவு தெளிவு கிடையாது எனவும், போதியளவு தெளிவற்ற அரசாங்கம் ஊடகங்கள் மீதோ அல்லது வேறும் தரப்பினர் மீதோ குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பரத்தலமுல்ல சீலரதன தேரருக்குக் கூட நிதி திரவத்தன்மை பற்றிய தெளிவு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்களுக்கும் போதியளவு தெளிவு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் தொடர்பில் உதய ஆர் செனவிரட்ன அறிக்கை தொடர்பில் போலி தகவல் வெளியிட்டமைக்காக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவி விலக வேண்டுமென கோரியுள்ளார்.

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அரசியல் சாசனம் பற்றி அவர்களுக்கு போதியளவு தெளிவு கிடையாது என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...