11 28
இலங்கைசெய்திகள்

Wi-Fi பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

Wi-Fi பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான இடங்களில் Wi-Fi ஐ பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

எனவே, பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தி இணைய வேலைகளை செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“இலவச Wi-Fi ஐ சேவையின் மூலம் தமது இணைய சாதனங்களில் ஊடுருவி கடவுச்சொற்கள் மற்றும் பிற இரகசிய தகவல்களை திருடும் மோசடி இடம்பெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களது மின்னஞ்சல் முகவரிகளை அணுகி எந்த நேரத்திலும் கணக்கியல் பணியையும் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் WhatsApp கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் இணைய குற்றவாளிகள் verification codes மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 194
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: அடுத்த சுற்றுக்கான ஆயத்தப்பணிகளில் பாகிஸ்தான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்...

world 193
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலப்பகுதியில் சாலை விபத்துகள்: 44 பேர் உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 10 முதல் 15 ஆம்...

world 192
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் மூன்று இலங்கைச் சிறுத்தைக்குட்டிகள்: 30 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அரிய நிகழ்வு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் கடந்த ஜனவரி 1-ஆம் திகதி பிறந்த மூன்று இலங்கைச் சிறுத்தைக்குட்டிகள் (Sri...

world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...