arrest scaled
செய்திகள்இந்தியாபிராந்தியம்

நாடளாவிய சுற்றிவளைப்பு – 13 பேர் கைது!

Share

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 8 மதுபான சுற்றிவளைப்புகளில் எண்மர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 203 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 571 லீற்றர் கோடா, ஆறு செப்புத் தகடுகள், இரண்டு எரிவாயு அடுப்புகள், ஒரு எரிவாயு அடுப்பு என்பவற்றையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 240 புகைத்தல் பொருட்களுடன் கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருநாகல், பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாரளுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாரளுவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி, உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனஹடுவ வாவிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி பல்வேறு வகையான மரப்பலகைளுடன் பயணித்த டிரக்டரை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார் பலகைகளுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். பல்லேபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், கருவலகஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரியன்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திமின்றி மரம் அறுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 21, 47 வயதுகளையுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...