18 21
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை: முக்கிய அறிவிப்பு

Share

யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை: முக்கிய அறிவிப்பு

கொழும்பு (Colombo) கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவை இன்று (28) முதல் ஆரம்பமாகியுள்ளது.

 

குறித்த தகவலை பிரதி தொடருந்து பொது முகாமையாளர் (போக்குவரத்து) என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு கோட்டையில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு தொடருந்து புறப்பட்டுள்ளதுடன், நாளை 29 ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் (Jaffna) பிரதான தொடருந்து நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

 

வடக்கு தொடருந்து பாதையில் தினமும் தொடருந்து பயணிக்கும் என்றும், தொடருந்து கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் தொடருந்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

தொடருந்து நேர அட்டவணைக்கு அமைய, கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் தொடருந்து பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையை சென்றடையும். பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் தொடருந்து இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

 

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் தொடருந்து பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் தொடருந்து இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.

 

மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் தொடருந்து இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும். மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் தொடருந்து இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...