Priyanka
செய்திகள்இந்தியா

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கைது

Share

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி பொலிஸாரால் கைது செயப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பொலிஸ் காவலிலிருந்து சாவடைந்த சுகாதார பணியாளரின் குடும்பத்தை காண்பதற்கு பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார்.

இவ் வேலையில் கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் பிரியங்கா காந்தியை கைது செய்தனர்.

பிரியங்கா காந்தி ஆக்ரா செல்ல அனுமதி பெறவில்லை எனவும் அதனால் ஆக்ரா செல்ல அனுமதிக்கமுடியாது என பொலிஸார் கூறியுள்ளார்கள்.

மேலும் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி அங்கு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், தான் நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் சுகந்திரமுள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டிய பின்னர் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

அதே போல் இம்மாதம் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசம் சென்றபோது பொலிஸார் தடுத்த நிறுத்தப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...