images 1 1
இலங்கைசெய்திகள்

வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி அநுர

Share

வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி அநுர

இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் அதிக கடன் வாங்கிய தலைவராக தற்போதைய ஜனாதிபத அநுர குமார திஸாநாயக்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

திலித் ஜயவீர தலைமையில் கணேமுல்ல நகரில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் எந்த மூலோபாயமும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நான் தற்போதைய ஜனாதிபதியிடம் அன்றும் சுட்டிக்காட்டினேன். அவர் முன்வைக்கும் எந்த திட்டத்திலும் எவ்வித மூலோபாயமும் இல்லை.

இலங்கையில் மிகக் குறுகிய காலத்தில் அதிக கடன் வாங்கியவராக தற்போது அவர் சரித்திரத்தில் இடம்பிடிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சியை எங்களிடம் கொடுங்கள் எனவும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...