1 51
இலங்கைசெய்திகள்

சிறப்பான பாதையில் செல்லும் இலங்கை: விரைவில் மூன்றாவது மதிப்பாய்வுக்கு தயாராகும் ஐஎம்எப்

Share

சிறப்பான பாதையில் செல்லும் இலங்கை: விரைவில் மூன்றாவது மதிப்பாய்வுக்கு தயாராகும் ஐஎம்எப்

இலங்கை சில கடின வெற்றிகளுக்கு வழிவகுத்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் நீண்ட தூரம் சிறப்பாக பயணித்து விட்டதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மூன்றாவது மதிப்பாய்வை விரைவில் மேற்கொள்ளமுடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஸ்ணா சீனிவாசன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஒருமித்த கருத்தை எட்டமுடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கடினமாக வென்ற ஆதாயங்களை புதிய அரசாங்கம் திட்டத்தின் கீழ் பாதுகாக்கவும், கட்டியெழுப்பவும் சர்வதேச நாணய நிதியம் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கை உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனும், தனியார் கடன் வழங்குனர்களுடனும் உடன்பாடுகளை எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...