27 15
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு தூதரகங்களுக்கு இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்தி

Share

வெளிநாட்டு தூதரகங்களுக்கு இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்தி

உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று சுட்டிக்காட்டி, வெளியிடப்பட்ட வெளிநாட்டு தூதரகங்களின் பயண ஆலோசனைகள் தொடர்பாக, இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது.

 

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை தொடர்ந்தும் ஏனைய பல நாடுகளும் இந்த பயண ஆலோசனையை விடுத்திருந்தன.

 

இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அதன் முக்கிய சுற்றுலாத் துறையின் மீது, வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு இது ஏதோ ஒரு கொடூரமான நகைச்சுவையாக உள்ளதா? என்று இலங்கை சுற்றுலா கூட்டணியின் தலைவர் மலிக் ஜே பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதோடு, இருவரைக் கைது செய்துள்ளனர்.

 

அத்துடன் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனினும் பொருளாதார சவால்கள் மற்றும் அண்மைய விசா செயலாக்க நெருக்கடி ஆகியவற்றில் இருந்து சுற்றுலாத் தொழில்துறையை மேம்படுத்த, இலங்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆலோசனைகள் குறித்து சுற்றுலாத்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

அறுகம்பை பற்றிய அமெரிக்க எச்சரிக்கையை அடுத்து, இஸ்ரேலிய ஊடகங்கள் அதனை விரிவுபடுத்தி, இஸ்ரேலிய பயணிகளுக்கு, இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்பதை பரிந்துரைத்துள்ளதாக பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்

 

ஐக்கிய இராச்சியத்தின் ஆலோசனையானது, இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ள நிலையில், அது அமெரிக்காவின் எச்சரிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என மலிக் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே தூதரகங்களின் ஒவ்வொரு முன்பதிவும் இலங்கையின் மீட்சிக்கு இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இருப்பினும் குறித்த பயண ஆலோசனைகளுக்கு புறம்பாக சுற்றுலாப்பயணிகள், மாயைகளுக்கு (புகை மற்றும் கண்ணாடிகளுக்கு) அப்பால் பார்த்து, இலங்கையை நோக்கிய தொடர்ந்து முன்பதிவு செய்வார்கள் என்று தாம் நம்புவதாகவும் மலிக் ஜே பெர்னாண்டோ கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...