31 8
இலங்கைசெய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Share

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட சொகுசு வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க தயார் என நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொகுசு வாகனமானது கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க கால அவகாசம் கோரியிருந்தநிலையில் அவர் இன்று திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நேற்று அறிவி்திருந்தார்.

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அவரது சட்டத்தரணி நீதிமன்றில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த வாகனம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் பயன்படுத்தப்பட்டதா? என நீதியரசர் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

தேர்தல் கால பிரசார செயற்பாடுகளுக்காகக் குறித்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேலும்,  வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகாத குற்றச்சாட்டில் ஜோன்ஸ்டன்

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...