27 13
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் ரணில்

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் ரணில்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (23.10.2024) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட தகவலை தொடர்ந்து விக்கிரமசிங்க அறிக்கையொன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புக்களை கோடிட்டு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் இருவரும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்த முன்னறிவிப்புகளை புறக்கணித்தமைக்கு பொறுப்பானவர்கள் என கம்மன்பில குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜானகி அல்விஸ் தலைமையிலான இந்த குழுவை, இந்த வருட ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்க நியமித்தது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக, கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...