20 17
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் மாயம்

Share

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் மாயம்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான 12 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாகனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகத்தின் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய ஜனாதிபதி செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலமான செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஒன்பது கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 6 வண்டிகள் மற்றும் இரண்டு டிராக்டர்கள் அந்த வாகனங்களில் அடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சோதனையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 51 வாகனங்கள் காணாமல்போயுள்ளதாகவும், அதன் பின்னர் 22 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஒரு அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு ஏறக்குறைய ஆறரை மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட போதிலும், காணாமல்போன வாகனங்கள் தொடர்பிலான விசாரணைகளை தொடர்வதற்கான முக்கிய தகவல்கள் எதுவும் அவரது வாக்குமூலங்களில் இருந்து வெளியாகவில்லை எனவும் அறியமுடிகின்றது.

மேலும், பதவியேற்ற நாள் முதல் கோப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், பழைய கோப்புகளை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதாகவும், கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாற்று வழிகளில் காணாமல்போன வாகனங்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...