11 20
இலங்கைசெய்திகள்

பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்தியாவின் இரட்டிப்பு உதவி

Share

பெருந்தோட்ட பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்தியாவின் இரட்டிப்பு உதவி

இலங்கையில் பெருந்தோட்டப் பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான மானிய உதவியை இந்தியா இரட்டிப்பாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் கல்வி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம். திலகா ஜெயசுந்தர ஆகியோர் இது தொடர்பான இராஜதந்திர கடிதங்களில் அண்மையில் கொழும்பில் வைத்து  கையெழுத்திட்டுள்ளனர்.

இதன்படி, பெருந்தோட்டப் பிரதேசங்களில் 9 பாடசாலைகள் இந்திய அரசாங்கத்தின் மானிய ஆதரவை பெறவுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதல் நிதியுடன், திட்டத்திற்கான மொத்த அர்ப்பணிப்பு இப்போது 600 மில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 9 பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த திட்டத்தின் ஊடாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மத்திய மாகாணத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் 6 பாடசாலைகளும் ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தில் தலா ஒரு பாடசாலையும் அடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...