5
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது விரைந்து உதவிய இந்தியா

Share

இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது விரைந்து உதவிய இந்தியா

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளின் போது எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புத்தரின் போதனைகள் மற்றும் பாலியை செம்மொழியாக இந்திய அரசு அங்கீகரித்ததை நினைவுகூரும் வகையில், புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சர்வதேச அபிதம்ம திவாஸ் விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புத்தபெருமான் தனது சொற்பொழிவுகளை பாலி மொழியிலேயே ஆற்றியுள்ளார். இந்தநிலையில், இந்திய அரசு, பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை இந்த மாதத்தில் வழங்கியுள்ளதால், இந்த ஆண்டு அபிதம்மா திவாஸ் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாலி மொழிக்கு செம்மொழியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை, புத்தபெருமானின் மகத்தான பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த மரியாதை என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் புத்தபெருமானின் போதனைகள் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, புத்தபெருமானின் கொள்கையின் அடிப்படையில், துருக்கியில் நிலநடுக்கம், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுநோய் போன்ற உலகளாவிய அவசர நிலைகளின் போது இந்தியாவின் விரைவான நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...