5
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது விரைந்து உதவிய இந்தியா

Share

இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது விரைந்து உதவிய இந்தியா

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளின் போது எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புத்தரின் போதனைகள் மற்றும் பாலியை செம்மொழியாக இந்திய அரசு அங்கீகரித்ததை நினைவுகூரும் வகையில், புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சர்வதேச அபிதம்ம திவாஸ் விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புத்தபெருமான் தனது சொற்பொழிவுகளை பாலி மொழியிலேயே ஆற்றியுள்ளார். இந்தநிலையில், இந்திய அரசு, பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை இந்த மாதத்தில் வழங்கியுள்ளதால், இந்த ஆண்டு அபிதம்மா திவாஸ் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாலி மொழிக்கு செம்மொழியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை, புத்தபெருமானின் மகத்தான பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்துக்குக் கிடைத்த மரியாதை என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் புத்தபெருமானின் போதனைகள் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, புத்தபெருமானின் கொள்கையின் அடிப்படையில், துருக்கியில் நிலநடுக்கம், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுநோய் போன்ற உலகளாவிய அவசர நிலைகளின் போது இந்தியாவின் விரைவான நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...