1 25
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதி அநுரவிற்கு அழுத்தம்

Share

எரிபொருள் விலை குறைப்பு: ஜனாதிபதி அநுரவிற்கு அழுத்தம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்கு முன்னர் கூறியது போன்று எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 82.50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்றையதினம் (17) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைப்புக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் ஜனாதிபதி, எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் நிதியமைச்சுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள இந்த அநியாய விலைச்சூத்திரத்தை எதிர்வரும் நாடாளுமன்றத்தில் இரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் லாபமீட்டும் வகையில் எரிபொருள் லீட்டர் ஒன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா வரி அறவீடு செய்வதாக ஆனந்த பாலித குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதன் படி, 50 ரூபா வரி நீக்கத்துடன் எரிபொருள் ஒரு லீட்டரின் விலையை 82 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...