21 11
இலங்கைசெய்திகள்

சீன செல்வாக்கை முறியடிக்கும் அநுர அரசின் முதலாவது இந்திய உட்கட்டமைப்புத் திட்டம்

Share

சீன செல்வாக்கை முறியடிக்கும் அநுர அரசின் முதலாவது இந்திய உட்கட்டமைப்புத் திட்டம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சீனச் செல்வாக்கை முறியடிப்பதற்கான முயற்சிகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட முதலாவது பெரிய இருதரப்பு உட்கட்டமைப்புத் திட்டமாக இந்திய – இலங்கை பாதை திட்டமிடல் காணப்படுவதாக இந்திய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 பில்லியன் டொலர் செலவில் சாலை மற்றும் தொடருந்து இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக, இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த மாதம் இது தொடர்பான சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றதாக சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இரு தரப்பு யோசனையின்படி, இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையில் திருகோணமலை இடையே நெடுஞ்சாலை மற்றும் தொடருந்து இணைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவில் உள்ள தலைமன்னாருக்கும் இடையில் தரைப்பாலத்தை இலங்கை அரசாங்கம் 2002 இல் முன்மொழிந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் தரைப்பாலம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் தற்போது இந்த யோசனை இறுதியாகியுள்ளது என்று பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வீதி அல்லது தொடருந்து தொடர்புகள் இல்லை. இலங்கைக்கு மிக அருகில் உள்ள இந்திய நகரமான தனுஸ்கோடியில் ஒரு தொடருந்து நிலையம் இருந்தது.

ஆனால் அது 1964 இல் ஒரு சூறாவளியில் அடித்துச் செல்லப்பட்டது. 1966 வரை ஒரு குறுகிய படகு சேவையின் மூலம் இலங்கையில் தலைமன்னார் மற்றும் இந்தியாவின் தனுஸ் கோடி தொடருந்து நிலையங்கள் இணைக்கப்பட்டன.

இதேவேளை புதிய பாதை மற்றும் தொடருந்து வழி அமைப்புக்களின்போது கப்பல்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வகையில் பாலங்கள் மற்றும் நீருக்கடியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்றும் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திட்டங்கள் தொடர்பாக இ;ந்திய தரப்பில் இருந்து இன்னும் இறுதித் தகவல்கள் வெளியாகவில்லை.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...