15 14
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படை பின்பற்றப்படும்! கே.டி.லால்காந்த

Share

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படை பின்பற்றப்படும்! கே.டி.லால்காந்த

தேசிய மக்கள் சக்தியிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் விருப்பு வாக்கு முறைமை கிடையாது என சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்றத் தெரிவு இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கை என்பது தேர்தல் சட்டம் எனவும் அதற்கு புறம்பாக செயற்படப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தற்பொழுது பாரிய மக்கள் கட்சியாக உருப்பெற்றுள்ளது எனவும் கடந்த காலங்களில் சின்னத்திற்காக மட்டும் வாக்கு கேட்டதாகவும் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...