1 20
இலங்கைசெய்திகள்

கட்சி நிதிக்கு செல்லப்போகும் தேசிய மக்கள் சக்தி எம்பிக்களுக்கான சம்பளம்

Share

கட்சி நிதிக்கு செல்லப்போகும் தேசிய மக்கள் சக்தி எம்பிக்களுக்கான சம்பளம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவாகும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அனைவரும் தமது சம்பளத்தை கட்சி நிதிக்கு வழங்கவுள்ளதாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(sunil handunnetti) தெரிவித்துள்ளார்.

தமது கட்சி சலுகைகளுக்காக அரசியல் செய்யும் இயக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.

கொள்கையில் மாற்றம் ஏற்படாது

ஆளுங்கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி இந்த கொள்கையில் மாற்றம் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை தலவத்துகொடையில் நேற்றையதினம் (13) தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) கலந்து கொண்ட உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...