28 7
இலங்கைசெய்திகள்

விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் சாதனையை தனதாக்கிய எலான் மஸ்கின் நிறுவனம்

Share

விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் சாதனையை தனதாக்கிய எலான் மஸ்கின் நிறுவனம்

உலகளாவிய விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் படைத்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சுப்பர் ஹெவி பூஸ்டர் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பியதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்சிப் யைஹெவி பூஸ்டர் விண்கலம் மீண்டும் ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பச் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோசிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று அக்டோபர் 13 ஆம் திகதியன்று, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது 400 அடி உயர ஐந்தாவது ஸ்டார்சிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியது.’

இந்தநிலையில் விண்ணில் ஏவப்பட்ட 7 நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சுப்பர் ஹெவி பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்திற்கே திரும்பியது.

ஏற்கனவே இதற்கு முன்னர் ஏவப்பட்ட பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பவில்லை. எனினும் இந்த முறை, மிக துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து, 5000 மெட்ரிக் தொன் எடை கொண்ட சுப்பர் ஹெவி பூஸ்டர் விண்கலம் மீண்டும் ஏவுதளத்துக்கே திரும்பியுள்ளது.

இதன்படி பூமிக்கு திரும்பிய ஹெவி பூஸ்டர் விண்கலத்தை “மெக்காஸில்லா” எனப்படும் மிகப்பெரிய லோன்ச்பேட் இயந்திரத்தில் உள்ள ‘சொப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்ட கைகளை போன்ற கருவி பிடித்து தரையிறக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...