14 10
உலகம்செய்திகள்

ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலில் நிலைக்கொள்ள தயாராகும் அமெரிக்க படைகள்

Share

ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலில் நிலைக்கொள்ள தயாராகும் அமெரிக்க படைகள்

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா தமது துருப்புக்களை அனுப்பியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் இன்று பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ”டெர்மினல் ஹை-ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் Terminal High-Altitude Area Defense (THA) படைப்பிரிவை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல என பென்டகனின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேட்ரிக் ரைடரின் கூற்றுப்படி, THA படைப்பிரிவில் சுமார் 100 அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகின்றன.

அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்குள் நிலைநிறுத்தப்படுவது அரிது என்றாலும், ஏவுகணைகளை எதிர்க்கும் பாதுகாப்பு அமைப்பை இயக்குவதற்கான வழக்கமான எண்ணிக்கையிலான துருப்புக்களே அனுப்பப்படுகிறது என விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் 13 மற்றும் ஒக்டோபர் 1 அன்று ஈரான் இஸ்ரேலின் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியிருந்தது.

இதில் அக்டோபர் 1 அன்று ஈரானின் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஆலோசனை நடத்தி வருகிறது.

மேலும் ஈரானிய அணுசக்தி தளங்கள் அல்லது எண்ணெய் உற்பத்தி பகுதிகளை இஸ்ரேல் குறிவைப்பதை அமெரிக்க அதிகாரிகள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்படி ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்து அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் தனது இருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் தனது வான் பாதுகாப்பை அமெரிக்கா பலப்படுத்தியுள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடல், செங்கடல் மற்றும் அரேபிய கடலுக்கு கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் விமான தாங்கி கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் சைப்ரஸுக்கும் கூடுதல் துருப்புக்களை அனுப்பியது.

Share
தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...