14 10
உலகம்செய்திகள்

ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலில் நிலைக்கொள்ள தயாராகும் அமெரிக்க படைகள்

Share

ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலில் நிலைக்கொள்ள தயாராகும் அமெரிக்க படைகள்

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா தமது துருப்புக்களை அனுப்பியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் இன்று பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ”டெர்மினல் ஹை-ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் Terminal High-Altitude Area Defense (THA) படைப்பிரிவை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல என பென்டகனின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேட்ரிக் ரைடரின் கூற்றுப்படி, THA படைப்பிரிவில் சுமார் 100 அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகின்றன.

அமெரிக்க துருப்புக்கள் இஸ்ரேலுக்குள் நிலைநிறுத்தப்படுவது அரிது என்றாலும், ஏவுகணைகளை எதிர்க்கும் பாதுகாப்பு அமைப்பை இயக்குவதற்கான வழக்கமான எண்ணிக்கையிலான துருப்புக்களே அனுப்பப்படுகிறது என விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் 13 மற்றும் ஒக்டோபர் 1 அன்று ஈரான் இஸ்ரேலின் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியிருந்தது.

இதில் அக்டோபர் 1 அன்று ஈரானின் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஆலோசனை நடத்தி வருகிறது.

மேலும் ஈரானிய அணுசக்தி தளங்கள் அல்லது எண்ணெய் உற்பத்தி பகுதிகளை இஸ்ரேல் குறிவைப்பதை அமெரிக்க அதிகாரிகள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதன்படி ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்து அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் தனது இருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் தனது வான் பாதுகாப்பை அமெரிக்கா பலப்படுத்தியுள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடல், செங்கடல் மற்றும் அரேபிய கடலுக்கு கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் விமான தாங்கி கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் சைப்ரஸுக்கும் கூடுதல் துருப்புக்களை அனுப்பியது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...