4 16
இலங்கைசெய்திகள்

அரசியலில் ஓய்வு என்ற சொல்லை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி விளக்கம்

Share

அரசியலில் ஓய்வு என்ற சொல்லை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி விளக்கம்

இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் யாரும் ஓய்வு பெறவில்லை. இறந்த பின்னரே ஓய்வு என்ற நிலை இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சுட்டிக்காட்டியுள்ளார்

பொதுத்தேர்தலில் போட்டியிடும், தமது கட்சி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறான சூழல்களே புரட்சிகள் எனப்படும் என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவே என்று கூறிய அவர் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி முகாமினால் சுமத்தப்பட்ட தவறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே, தமது அரசாங்கத்தினால் நிரூபிக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, எதிர்க்கட்சி முகாமில் பொதுத் தேர்தலுக்கான கோஷங்கள் ஏதும் இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எதிர்க்கட்சி முகாம் தங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களைச் செய்தது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பிறகு மோதல்கள் ஏற்படும் என்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்றும் சொன்னார்கள்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும், இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் என்றும் கூறினார்கள்.

ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்கள் கண் முன்னே சிதைந்துவிட்டன என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...