1 19
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலின் பின் அநுரவுடன் இணையப்போகும் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்

Share

பொதுத் தேர்தலின் பின் அநுரவுடன் இணையப்போகும் வடக்கின் முக்கிய அரசியல் தலைவர்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படத் தயார் என வடக்கின் அரசியல் தலைவர் ஒருவர் தன்னிடம் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்தார்.

தலவத்துகொடையில் இன்று (13) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பலமான அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான இடைக்கால கட்டத்தில் நாம் நகர்கிறோம். சில தீர்மானங்களுக்கும் சில நடவடிக்கைகளுக்கும் வலுவான அரசியல் சக்தி தேவை.

2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) நாடாளுமன்றத்தில் 2/3 அதிகாரத்தைப் பெற்றார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 2020ல் கோட்டாபய ராஜபக்சவிற்கு(gotabaya rajapaksa) 2/3 அதிகாரம் கிடைத்தது. ஆனால் இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் 2/3 அதிகாரம் பறிபோனது.ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது.

வடக்கின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை சந்தித்தோம். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் படையுடன் இணைந்து செயற்பட தமது குழு விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும் அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படாவிட்டால் வடபகுதி மக்கள் எம்முடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் தெரிவித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...