14 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் செயற்பாடு தொடர்பில் இலங்கை கடும் கண்டனம்

Share

இஸ்ரேலின் செயற்பாடு தொடர்பில் இலங்கை கடும் கண்டனம்

லெபனானின் நாகுரா பகுதியில் ஐக்கிய நாடுகளின் அமைதிக்காக்கும் படையணியை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌிியி்ட்டுள்ளது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் லெபனானின் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்தனர். மேலும் ஏனைய நாடுகளின் இராணுவத்தினர் சுமார் 20 அளவில் காயமுற்றிருந்தனர்.

இவ்வாறு காயமடைந்த இலங்கை இராணுவத்தினரின் உடல்நிலை தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் லெபனானிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை தூதரகம் கூடுதல் அவதானத்துடன் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...