16 9
இலங்கைசெய்திகள்

கடந்த ஆட்சியாளர்களை விட ஜே.வி.பி மோசமானது: சுகாஸ் சாடல்

Share

கடந்த ஆட்சியாளர்களை விட ஜே.வி.பி மோசமானது: சுகாஸ் சாடல்

கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களை விட ஜே.வி.பி அரசாங்கம் மிகவும் மோசமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் (Kanakaratnam Sukhas) தெரிவித்துள்ளார்.

அராலியில் (Araly) வைத்து நேற்றையதினம் (11.10.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜே.வி.பி, என்.பி.பியுடைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) , தமிழ் மக்களுக்கு சார்பாக ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளையோ, போர் குற்ற விசாரணைகளையோ அல்லது இனப்படுகொலை விசாரணைகளையோ நாங்கள் முன்னெடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

இது ஆச்சரியமான ஒரு விடயம் அல்ல. ஆனால் ஜே.வி.பிக்கும், என்.பி.பிக்கும் பின்னால் செல்லுகின்ற தமிழர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.

ஜே.வி.பியினுடைய கடந்தகால செயற்பாடுளை எமது மக்கள் மிகத் தெளிவாக உணர வேண்டும். இல்லாவிட்டால் பானையில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக தமிழர்களுடைய எதிர்காலம் சூனியம் ஆகிவிடும்.

சந்திரிகாவின் ஆட்சியிலே சந்திரிகாவினுடைய (Chandrika Kumaratunga) பங்காளிகளாக இருந்து தமிழர்களை அழித்தொழிப்பதற்கு துணை நின்ற காட்சி தான் ஜே.வி.பி. யுத்தத்தினுடைய இறுதிக் கட்டத்திலே முள்ளிவாய்க்காலில் நிலப்பரப்பு குறைந்த சிறிய பகுதிக்குள் 4 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் சுருங்கியிருந்தவேளை, கனரக ஆயுதங்களை பாவித்து தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று மகிந்தவின் அரசுக்கு அழுத்தத்தை வழங்கியது.

இந்த சந்தர்ப்பத்தில் அந்தக் குறுகிய நிலப்பரப்புக்குள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வேண்டும் என்று மகிந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி கொழும்பில் (Colombo) போராட்டம் செய்தது இந்த ஜே.வி.பி.

இந்த ஜே.வி.பியின் அழுத்தத்தினால் மகிந்த அரசாங்கம் மிக கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தமிழர்களை தாக்கி அழித்தொழித்து இனப்படுகொலையை முன்னெடுத்தமை வரலாறு.

அதைவிட, தமிழர்களுடைய தாயகம் எனப்படுகின்ற இணைந்த வடக்கு கிழக்கினை பிரிப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பிரித்த ஒரு கட்சிதான் ஜே.வி.பி.

தமிழர்கள் தமது இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றை ஆட்சியையோ அல்லது மாகாண சபை முறைகளையோ ஏற்று கொள்ளவில்லை, அவற்றின் நிராகரித்துள்ளார்கள்.ஆனால் ஜே.வி.பியானது தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட மாகாண சபை முறைகள் கூட இலங்கையில் இருக்கக் கூடாது என சொல்கின்றது. ஏனென்றால் அதிலும் கொஞ்ச அதிகாரிகள் இருக்கின்றனவாம்.

ஒற்றையாட்சி என்ற பெயரில் யாப்பு இருக்கக் கூடாதாம். ஏனென்றால் ஒற்றையாட்சி என்ற பெயரில் இருந்தால் பிரித்தானியாவில் (United Kingdom) இருப்பதுபோல ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களுக்கு அதிகாரங்கள் கொடுப்பட்டு விடக்கூடிய அபாயம் இருப்பதாக ஜே.வி.பி கூறுகின்றது.

ஆகையால் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களை விட ஜே.வி.பி எவ்வளவு பயங்கரமானவர்கள் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் ஜே.வி.பி, என்.பி.பி அரசாங்கத்திற்கும் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களுக்கும் இடையில் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது.

அவர்கள் கொழுக்கட்டை என்றால் இவர்கள் மோதகம். ஆகையால் எமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...