27 4
இலங்கைசெய்திகள்

அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு கிரேக்க பொருளாதாரம் கடும் நெருக்கடியான நிலையை சந்தித்திருந்த நிலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான பணத்தை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்தமை காரணமாக நாட்டுக்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிக அளவில் நட்டம் ஏற்படுத்தியதாக இந்த நான்கு பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தலா 10 மில்லியன் பெறுமதியான சரீர பிணைகளின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்த சந்தேக நபர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதித்துள்ளதுடன் தங்களது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் நீதிமன்றின் அனுமதியுடன் பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பாரிய அளவு நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக அஜித் நிவாட் கப்ரால் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...