27 4
இலங்கைசெய்திகள்

அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு கிரேக்க பொருளாதாரம் கடும் நெருக்கடியான நிலையை சந்தித்திருந்த நிலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான பணத்தை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்தமை காரணமாக நாட்டுக்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிக அளவில் நட்டம் ஏற்படுத்தியதாக இந்த நான்கு பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தலா 10 மில்லியன் பெறுமதியான சரீர பிணைகளின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இந்த சந்தேக நபர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதித்துள்ளதுடன் தங்களது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் நீதிமன்றின் அனுமதியுடன் பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பாரிய அளவு நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக அஜித் நிவாட் கப்ரால் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...