26 5
இலங்கைசெய்திகள்

அநுரவுக்கு ஆதரவாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள விமல்

Share

அநுரவுக்கு ஆதரவாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள விமல்

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விமல் வீரவன்ச எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்வதற்கு வழி அமைக்கும் வகையில் தமது கட்சி இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி கட்சிகளின் உதவி இன்றி தனியாக தீர்மானம் எடுக்கக் கூடிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்க வேண்டும் என விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...