16 5
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து நடத்துனரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய உரிமையாளர்

Share

தனியார் பேருந்து நடத்துனரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய உரிமையாளர்

தனியர் பேருந்து ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக கூறி உரிமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் குறித்த சம்பவம் நேற்று(07.10.2024) இடம்பெற்றுள்ளது

இது தொடர்பில், தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையானரின் பேருந்தானது கல்முனை – மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவருகிறது.

குறித்த பேருந்தின் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக கூறி நடத்துனர் மீது அதன் உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்து கடமையில் இருந்த அவரை சம்பவதினமான நேற்று பகல் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றிற்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத்தந்த நிலையில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...