22 2
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்

Share

இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வரை தாமதமாகும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம், சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் அதேநேரம், இலங்கை பொதுமக்கள் மீதான சுமையை குறைப்பதற்கான வழிகளைத் தேடுவரே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் விதிமுறைகளில் உள்ள வரி சீர்திருத்தங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை ஜனாதிபதி நோக்கமாகக் கொண்டுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளில் சிலவற்றை, குறிப்பாக வரி அதிகரிப்புகளை பிற்போட்டு, அதன் மூலம், பொருளாதார நெருக்கடியுடன் போராடும் குடிமக்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை குறைக்கவும் அநுர நிர்வாகம் முயற்சிக்கிறது.

சர்வதேச நாணய நிதிய பணியாளர்களின் இலங்கை பயணத்தின் முடிவில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....