1 8
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு புதிய திட்டம்!

Share

அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு புதிய திட்டம்!

நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்துவது தொடர்பான பல புதிய திட்டங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து அனைத்து அதிகாரிகளுடனும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலை நடாத்திய பின்னரே எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய அரசாங்கம் விவசாயம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பல மாற்றங்களை செய்து வருகின்றது.

இலங்கையில் விவசாயம் செய்வதற்கான இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவதுடன் அதன் மூலம் நாட்டுக்கான வருமானத்தை ஈட்டும் பணியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...