12 1
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுர குமாரவை எப்படி அழைக்கவேண்டும்

Share

ஜனாதிபதி அநுர குமாரவை எப்படி அழைக்கவேண்டும்

அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அவரை தோழர் என அழைக்கலாம்,அதைவிடுத்து மாண்புமிகு தலைவர் என அழைக்கதேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் கே.டி. லால் காந்தா(K.D.  Lal Kanta) குறிப்பிட்டார்.

தேசிய பத்திரிகையொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்க என்று கூறலாம். இப்போது அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி. அதற்கிணங்க, நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதி அநுர திஸாநாயக்க என்று அழைப்பது பொருத்தமானது.

அதைவிடுத்து மிக உன்னதமானவர், மாண்புமிகு ஜனாதிபதி, கௌரவமான ஜனாதிபதி, போன்ற கௌரவங்கள் நமது ஜனாதிபதிக்கு தேவையில்லை. நாட்டுக்கு தலைவனாக இருந்தாலும் அவர் மக்களின் சேவகன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....