WhatsApp Image 2024 10 01 at 18.12.28 1
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Share

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன (Channa Gunawardana) நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (01) குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் (Muditha S.G. Peiris) புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகிய நிலையில் இவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ன குணவர்தன பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் (UK) மற்றும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் இரண்டிலும் ஒரு சக உறுப்பினராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதலாவது பட்டத்தைப் பெற்ற இவர் அவுஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ (MBA) பட்டம் பெற்றார்.

சன்ன குணவர்தன தற்போது மலேசியாவில் உள்ள முகாமைத்துவம் மற்றும் விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை படித்து வருகின்றார்.

இதேவேளை முதித பீரிஸ் கடந்த 27ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...