24 66f8ce3f915ac
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தம் தொடர்பில் அநுரவின் தீர்மானம்

Share

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தம் தொடர்பில் அநுரவின் தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30.09.2024) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே, மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கும் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

குறித்த தீர்மானமானது, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட 07 பேர் கொண்ட குழு முன்வைத்த பரிந்துரையில் கீழ் எடுக்கப்பட்டது.

எனினும், பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்த விடயம் தொடர்பில் அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இதன் போது, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...