1 38
இலங்கைசெய்திகள்

அநுரவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க தயாராகும் கொரியா

Share

அநுரவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க தயாராகும் கொரியா

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க தயார் என கொரிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கக் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும், இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் தயார் என கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ள நிலையில், பல நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வழங்கப்படவுள்ள உதவிகளை தொடர்பிலும் அறிவித்துள்ளன.

இதேவேளை ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஆதரவும் வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...