2 39
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலில் சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம்! முன்னாள் எம்.பி. மனோ சூளுரை

Share

பொதுத் தேர்தலில் சஜித் அணியின் ஆட்சியை கொண்டுவந்தே தீருவோம்! முன்னாள் எம்.பி. மனோ சூளுரை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம் எனவும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாட்சியை நிறுவியே தீருவோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்களைச் செய்துகொண்டதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டணியாகக் கலந்துரையாடுவோம்.

நாங்கள் தனிக் கட்சி. தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற அடிப்படையில் இம்முறை மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் எங்களின் ஆதரவாளர்கள் வாக்குகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.

எங்கள் மக்கள் எங்களின் நிலைப்பாட்டை ஏற்று நடந்திருக்கின்றார்கள். அது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தெரியும்.எங்கிருந்தாலும் நாங்கள் நிலைத்திருப்போம்.

இன்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் விருப்பத்துடனேயே இருக்கின்றோம். அதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...