8 33
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது பிரசார செலவுப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு 38 வேட்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகு, அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், தவறான செலவு அறிக்கைகள் இருந்தால், சரிபார்க்கக்கூடிய ஆவணங்களுடன் பொலிஸில் யார் வேண்டுமானாலும் முறைப்பாடு செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை 109 ரூபா என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, (17,140,354) வாக்காளர்களுக்கு ஒரு வேட்பாளர் பிரசாரச் செலவுக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச வரம்பு 186 கோடி ரூபாய். அந்த தொகையில் 60 சதவீதம் அதாவது 112 கோடி ரூபாயை வேட்பாளரால் பிரசாரச் செலவுகளாகவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் பிரசாரச் செலவாகச் செலவிடக்கூடிய தொகை 40 சதவீதமாகவும் இருக்குமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...